முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு பௌத்த விகாரை வடிவிலான உருவம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
காட்சிப்படுத்தப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான பதாதை இனம்தெரியாத நபர்களினால் நேற்று (11) இரவு அகற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

