எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் கொழும்பில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்க முடியுமென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் முதல்வர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபையின் வருமானம் கடந்த காலங்களில் கொழும்பு மக்களுக்கு முழுமையாக செலவிடப்படாமல் உள்ள நிலையில், கொழும்பு மாநகர சபையின் அனைத்து வருமானமும் எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
