தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் யாழுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றையதினம் (17) மாலை நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்டதாக சுமந்திரன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
