யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி இன்றையதினம் (20) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
