மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசு எடுத்த முடிவினால் அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாடு முழுவதும் அரிசி, தேங்காய், காய்கறிகள், மீன், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் சவர்க்காரம், சலவைத்தூள், பற்பசை மற்றும் ஷம்போ ஆகியவற்றின் விலைகளும்சந்தையில் பெருமளவில் அதிகரித்துள்ளன.
வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் நுகர்வுப் பொருட்களை தன்னிச்சையான விலையில் விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நுகர்வோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
