அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதி வழங்கப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இதன் காரணத்தால் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் ஜூன் மாதத்துக்கான சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் திகதி வழங்கப்பட்டாலும், ஜூன் மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் சம்பளம் கடந்த மாதமும் தாமதமானது, இதற்கான காரணம் ஆராயப்பட வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
