பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவு குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிம்சாரா அமல் என்ற கைதியே தற்கொலைக்கு முயன்றதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
