நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 05 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றதாக உள்ளதால் அவற்றை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, 5 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றவை என கண்டறியப்பட்டு இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000 கொள்கலன்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
