பேருந்து சாரதிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு கருதி சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்குமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது.

குறித்த சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதனை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply