கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று (07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த சொகுசு ரயில் கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 க்கு பயணத்தை ஆரம்பித்து, பின்னர், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர், யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் எனவும் ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply