கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்றையதினம் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலான காலப்பகுதியில்,

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க / சீதுவை நகர சபை பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டுநாயக்க, மினுவாங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட ஒரு பகுதி ஆகியவற்றில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply