டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு- ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, டிரம்ப்பினால் முன்னதாக இலங்கை மீது விதிக்கப்பட்ட 44% வரியை, 30% ஆகக் குறைத்தமையால் அடுத்து, இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகள் என்ன என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply