ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை மேம்படுத்தும் திட்டம் தற்போது திறம்பட செயல்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.
ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆராஃம்பிக்கப்பட்ட ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் திட்டம் 2020 நவம்பரில் நிறைவு பெற்றது.
எனினும் குறித்த திட்டம் எதிர்பார்த்த பலனை அடையவில்லை என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.
ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் இந்த திட்டம் நாடு முழுவதும் ரயில்வே சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
