டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே சந்திப்பு!

டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது டிஜிட்டல் கல்வி குறித்த அறிவை வழங்குவதற்கான விதிமுறைகள், ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டங்களில் தேவையான திருத்தங்களைச் சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், டிக்டாக் மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் டிக்டாக் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் நடந்து வரும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.

டிக்டாக்கின் தெற்காசியாவிற்கான அரசு உறவுகள் மற்றும் பொது விவகாரத் தலைவர் ஃபெர்டஸ் அல் மொட்டாகின் மற்றும் பிரதமரின் கூடுதல் செயலாளர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply