நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று (22) முதல் 25ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் தற்போது நாடாளுமன்ற நவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 11.00 – மு.ப. 11.30 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது).

(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது).

(iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

பி.ப. 5.00 – பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply