ரஷ்யாவில் 49 பயணிகளுடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொறுங்கி விபத்து!

ரஷ்யாவில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.

குறித்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.

இதனையடுத்து ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் Mi-8 ரக ஹெலிகொப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானம் அங்காரா எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ஆன்டோநோவ் அவ் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply