கறுப்பு ஜூலை நினைவேந்தலை முன்னிட்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.வடமராட்சி நெல்லியடி பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த தீப்பந்தப் போராட்டம் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் இடம்பெற்றது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.எ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற தீப்பந்தப் பேராட்டத்தில் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
