அதிவேக வீதிகளில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 1 முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்துகளில் உள்ள அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் ஏ.பி. சந்திரபாலா இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

2025 செப்டம்பர் 1 முதல், அதிவேக வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது- என்று தெரிவித்தார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply