தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவிற்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து முறைப்பாடளித்தும் இதுவரையில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
வட மாகாணத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கும் ஒரே ஒரு வைத்தியசாலை தெல்லிப்பளை வைத்தியசாலை காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவின் பொறுப்பு வைத்தியராக பணியாற்றும் வைத்தியர் கிருசாந்தி, வைத்தியசாலை தொடர்பான தனிப்பட்ட பணக்கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
இது தொடர்பில் முறைப்பாடளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்கையில்,
இந்த விடயம் தொடர்பில் பதிலளிப்பதற்கு 2 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.
அவரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸில் அல்லது சி.ஐ.டிக்கு முறைப்பாடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை வழங்கினால், எதிர்வரும் இரண்டு நாட்களுக்குக்குள் தான் பதில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
