தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது- தபால் மா அதிபர் ருவான்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படமாட்டாது என தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் கடிதம் மூலம் அறிவுறுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவிக்கையில்,

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின்போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply