யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதபுதைகுழியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி எதிர்வரும் 25ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த அகழ்வாய்வின் போது 147 என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், 133 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
