யாழில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள்!

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 30 துப்பாக்கிகள் வரையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தலைமையில் குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 30 T-56 ரக துப்பாக்கிகளும், அவற்றிற்கு பயன்படுத்தப்படும் 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply