வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் மகோற்சவ திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அதிகாலை 05 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய துர்க்கை அம்மாவின் மகோற்சவ திருவிழாவில் 06ஆம் திகதி மாலை மஞ்ச திருவிழாவும், 11ஆம் திகதி காலை 09 மணிக்கு தேர் திருவிழாவும், மறுநாள் 12ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும், மாலை கொடியிறக்கமும் இடம்பெறும்.
மகோற்சவ காலங்களில் பகல் வேளைகளில் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறவுள்ளது. அதற்காக பிடியரிசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அன்னதானத்திற்கு அரசி சேகரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
