முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம்- வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவருடைய உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஆனாலும் இருதயத்தில் பல அடைப்புகள் உள்ளன. ஆகவே சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

தேசிய வைத்தியாசலையில் தற்போது இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாது. ஏனெனில் பலர் காத்திருப்பு படிட்டியலில் உள்ளனர். ஆகவே ரணில் விக்கிரமசிங்க தனியார் வைத்தியசாலையில் அந்த சிகிச்சையை விரும்பினால் செய்யலாம்.

அவ்வாறு இல்லையேல் ஆக குறைந்தது இரண்டு வருடங்கள் வரை அவர் காத்திருக்க வேண்டியிருக்கும். உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்கள் பலரும் வெளியில் காத்திருக்கின்றனர்.

ஆகவே முன்னுரிமை அடிப்படையில் இருதய சத்திரசிச்சைகளை செய்ய முடியாது. இதன் காரணமாக தனியார் வைத்தியசாலையில் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க சத்திரசிச்சையை செய்ய முடியும் என்று மருத்துவர் பெல்லன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply