வலஸ்முல்ல பொலிஸ் பிரிவின் மொரகந்த கொடவெவ பகுதியின் அருகே ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ 755 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
