காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!

காணாமல் போன ஆட்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், 2016ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தாபிக்கப்ப்பட்டுள்ளது.

காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரையில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு 16,966 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றுள் 10,517 முறைப்பாடுகள் விசாரணைகளுக்காக காணப்படுகின்றன.

அதன்படி இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply