மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவது பற்றி பரிசீலனை!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது.

இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply