நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தியாவிலிருந்து நேபாளத்தின் லும்பினிக்கு தரைவழியாக பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்ததாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
