யாழ். சுழிபுரம் பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த வயோதிபப் பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்
