உள்ளூராட்சி வாரம் இன்று முதல் ஆரம்பம்!

மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று (15) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவான் செனரத் கருத்து தெரிவிக்கையில்,

‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற முக்கிய கருப்பொருளுடன் உள்ளூராட்சி வாரத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையைப் பாதுகாக்கும் மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்க, பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தலைமையிலான தொடர்ச்சியான திட்டத்தில் கைகோர்க்க அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply