மத்திய மலைநாட்டில் மூடுபனி- பொலிஸாரின் அறிவுறுத்தல்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (16) இரவு முதல் கனமழை பெய்து வருவதுடன் அடர்ந்த மூடுபனி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளிலும், கிளை வீதிகளிலும் அடர்ந்த மூடுபனி நிலவுகின்றது.

எனவே இந்த வீதிகளில் வாகனம் செலுத்தும்போது, முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்குமாறு ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply