நல்லூர் மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

நல்லூர் மந்திரிமனையை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில் கடந்த புதன்கிழமை (17) பெய்த கனத்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து வீழ்ந்தது.

இந்தநிலையில் மந்திரிமனையை பார்வையிடுவதற்கு நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் (18) வருகை தந்திருந்தனர்.

இதன்போது தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply