மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை காலமானார்.
அவர் தனது 86ஆவது வயதில் நேற்று (19) காலமானார்.
மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த கனகசபை அவர்கள் ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.
இவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
