மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இறந்தவர் தொடர்பிலான விபரம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
