முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இதுவரை குறிப்பிட்ட திகதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்வார் என்று அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
