இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம்!

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தாலும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, இந்த விவகாரத்தைத் தீர்க்க அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும், கூட்டத்திற்கு ஜனாதிபதி ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி கோரியுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply