பேருந்தில் பயணிப்போர் பயணச்சீட்டு வைத்திருத்தல் கட்டாயம்- மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தல்!

மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதல் கட்டமையாக்கப்பட்டுள்ளது.

இதனை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே நாளை முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதலும், அதில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின் போது அதனை தம்வசம் வைத்திருப்பதும் கட்டாயமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply