ரிஷாத்தின் அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை, 2026 மார்ச் 25 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த மனு இன்று (02) நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மனுவை அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் திகதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply