NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பங்கேற்கும் பொருட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதுடில்லி செல்லவுள்ளார்.
NDTV உலக உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் புதுடில்லியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்துகொள்ளவுள்ளார்.
NDTV உலக உச்சி மாநாட்டில் உலகில் தற்போது மிகவும் செல்வாக்கு மிக்க சில பிரபலங்களை ஒன்றிணைக்கும் என கூறப்படுகின்றது.
அவர்களில் தற்போது பதவியில் இருக்கும் இரண்டு பிரதமர்களான இந்தியாவின் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஹரிணி அமரசூரிய மற்றும் இரண்டு முன்னாள் பிரதமர்களான பிரித்தானியாவின் ரிஷி சுனக் மற்றும் அவுஸ்திரேலியாவின் டோனி அபோட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
