யாழ்.போதனா வைத்தியசாலை 1987ஆம் ஆண்டு படுகொலை சம்பவம்- 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (21)  முன்னெடுக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

இதனை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply