பாதாள உலக தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தகவல்களை ஆராய்ந்ததில், பிரபல நடிகைகள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி குற்றப் புலனாய்வுத் துறை ஆறு பெண்கள் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.
இதன்போது அவரது கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதில் பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் இருக்கும் ஆபாச காணொளி தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மற்ற ஐந்து நடிகைகளின் புகைப்படங்களும், ‘மிஸ் இலங்கை’ மாடலின் புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் காணப்பட்டன.
பெரும்பாலான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட உறுதிமொழியை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கெஹெல்பத்தர பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டுப் நீதிமன்றின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் நேற்று அழைக்கப்பட்டது.
மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த டிசம்பர் 2ஆம் திகதி மனுவை அழைக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாட்டோம் என பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் அளித்த முந்தைய உறுதிமொழியை அந்தத் திகதி வரை நீட்டிக்குமாறு கோரினார்.
இந்தக் கோரிக்கையை பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.
அதன்படி அடுத்த நீதிமன்றத் திகதி வரை குறித்த உறுதிமொழியை நீட்டிக்க நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.
தனது மகன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மனுதாரர் கூறுகிறார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனின் உயிருக்கான பாதுகாப்பை உறுதி செய்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மனுதாரர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
