தீவிரமடைந்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்!

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயல்முறையானது தற்போது “குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை” நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பதில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரின் தன்னிச்சையான, சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக சபையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போதைய பதில் துணைவேந்தரும், பதிவாளரும் இணைந்து புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைக் கோரி செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான நிர்வாகச் செயல்முறை உட்பட கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் தலையீடுகளுக்குப் பின்னால் பதில் துணைவேந்தரே இருப்பதாகப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply