யாழ். செம்மணி புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்- அடுத்த வருடம் முன்னெடுக்க தீர்மானம்!

யாழ். செம்மணி புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகள் அடுத்த வருடமே முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் தற்போது ஆய்வினை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் யாழ். செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அடுத்த வருடமே முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் இதுவரையில் இரண்டு கட்ட அகழ்வாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply