இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களிடம் இருந்து “முற்பண தனிநபர் வருமான வரியை” அறவிடுவதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம் தொடர்பான பிரச்சினையை, அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்வு காண்பது பொருத்தமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய இந்த பரிந்துரையை முன்வைத்தார்.
இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து குறித்த வரியை அறவிடுவதற்கான இந்தத் தீர்மானம் அநீதியானது எனக் குறிப்பிட்டு, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் ஒருநாள் அணித் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் தாக்கல் செய்திருந்த ரிட் மனு இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
