முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
