இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றையதினம் (24) இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
அதன்படி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு ஒப்புதல் கிடைத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த முன்மொழிவு தொடர்பில் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதருக்கு அறிவிக்கப்பட உள்ளது.
அதற்கு பின்னர் இத்தாலியில் ஓட்டுநர் உரிமங்களுக்குப் பொறுப்பான நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே இந்த அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
