சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில்,

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிலவிய சீரற்ற வானிலையால் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிவாரண மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply