நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மையத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் சுமார் 07 மில்லியன் மின்சார நுகர்வோர் இருப்பதாகவும், அவர்களில் 3.9 மில்லியன் பேருக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, இந்த நுகர்வோரில் சுமார் 85% வீதம் பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் 16,771 மின்மாற்றிகள் செயலிழந்திருந்த நிலையில், அவற்றில் 14,549 மின்மாற்றிகள் ஏற்கனவே சரிசெய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள மின் இணைப்புத் துண்டிப்புகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளின் போது மின்சார ஊழியர் ஒருவர் தனது உயிரை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
