நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு 950 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உதவிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த உதவிப் பொருட்கள் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவிப் பொருட்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
