மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர், பெய்த கடும் மழை காரணமாக தற்போது மண்சரிவு அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாகக் கவனம் செலுத்தி, மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
